மதுரையில் குவிந்த மக்கள் பொருட்கள் கிடைக்காமல் விற்று தீர்ந்த அவலநிலை

மதுரையில் குவிந்த மக்கள்  பொருட்கள் கிடைக்காமல் விற்று தீர்ந்த அவலநிலை


" alt="" aria-hidden="true" />


 மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளில் 
26 - 4 - 2020 முதல்  
29 -  4 - 2020  ஆகிய நான்கு நாட்கள்  முழு ஊரடங்கு உத்தரவு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  அறிவிப்பை வெளியிட்டார்.  இதனையடுத்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க  பொதுமக்கள் காலையிலேயே   காய்கறிகள்  மற்றும் மளிகை பொருட்கள்   வாங்க  குவிந்தன.  காலை நேரத்திலேயே  பல இடங்களில் காய்கறிகள்  உள்ளிட்ட பொருள்கள் கிடைக்கவில்லை.  இதனால்  பொதுமக்கள் அங்குமிங்குமாக  பல இடங்களில்  அலைந்து வாங்குவதற்கு  முயற்சி மேற்கொண்டனர்.   காய்கறிகளின்  விலையும் கணிசமாக  உயர்த்தப்பட்டுள்ளது.  இன்று தற்காலிக  காய்கறி மார்க்கெட் மதுரை கல்லூரி வளாகத்தில்  அமைக்கப்பட்டிருந்தது.  அங்கும் காய்கறிகள் முழுமையாக விற்று தீர்ந்தன.  மேலும் அசைவப் பிரியர்கள்  ஆட்டுக்கறி  கோழிகறி மற்றும் மீன்களை   அதிக விலைக்கு விற்பனை செய்த போதும்  மக்கள் விலையையும் பொருட்படுத்தாமல்  வாங்கி சென்றனர்.  ஏழை எளிய நடுத்தர மக்கள்  கொரோனா தொற்று  ஊரடங்கு உத்தரவால்  வேலைகளுக்குச் செல்ல முடியாத நிலையில்  காய்கறிகள் மளிகை பொருட்கள் மற்றும்  அசைவ  பொருட்களை  அதிக விலைக்கு விற்பதால்  பொருட்கள் வாங்க  முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்   விலை அதிகமாக விற்கும்  காய்கறி மற்றும் மளிகை கடைகளை  அரசு  அதிகாரிகள் கண்காணித்து  அவர்கள் மீது   கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஏழை எளிய மக்கள்  மண  குமுறல்  உடன் தெரிவித்துள்ளனர். நடுத்தரம் மற்றும் ஏழை எளிய மக்களின் துயரத்தை போக்க எந்த அரசும் முன்வரவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தனர். 


Popular posts
ஊரடங்கு உத்தரவால் பலபேர் உணவில்லாமல் தவித்து வரும் நிலையில் நீலகிரி மாவட்ட கவுன்சிலர் மீனா மற்றும் குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா தலைமையில் 75 குடும்பங்களுக்கு ஒருவாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்பட்டன
Image
ஆம்பூரில் காடுகளில் தீ பரவாமல் தடுப்பது , பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த சுற்றுச்சூழல் பேரணி.
Image
திருவண்ணாமலை யோகி ராம் ஆசிரமம் நாள்தோறும் காலை, மாலை மற்றும் இரவு 500 நபர்களுக்கு சிவனடியார் மற்றும் ஆசிரமத்திற்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு மகேஸ்வர பூஜை செய்து சிவனடியார்க்கு படைத்து தலை வாழை இலையில் பரிமாறி வடை , பாயசம் மற்றும் உணவு நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவை 25 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது
Image
தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதி குணமடைந்தனர்
Image